தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த பெண் காப்பாற்றப்பட்டார் : கணவர் தப்பி ஓட்டம்

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்று (26) இரவு தீக்காயங்களுடன் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த அக்கம்பக்கத்தினர் , காப்பாற்றுங்கள் என அறையில் இருந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்ட பெண்ணை மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , சிகிச்சை அளிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, கணவரே பெண்ணை கொழுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 27 வயதுடைய பெண்ணே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.