நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு தமிழ்ப் பொது வேட்பாளர் அஞ்சலி!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொது வேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் ஒரு கட்டமாக இன்று இந்த அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அரியநேத்திரன் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி பிரச்சாரப் பயணத்தை அங்கிருந்து தொடர்ந்து ஆரம்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.