ஷிரான் பாசிக்கின் மகன் கட்டுநாயக்க விமான நிலையயத்தில் கைது!

டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நதீன் பாசிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இவர் இந்நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பின் கோட்பாதர் என அழைக்கப்படும் ஷிரான் பாசிக்கின் மகன் ஆவார்.

வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு நதின் பாசிக் டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.