மலையகத்தில் இலஞ்சமாக விநியோகிக்கப்படும் விஷக் கள்ளு தொடர்பில் கண்டறிய தயாராகிறது தேசிய விஷத் தகவல் நிலையம் !

பெருந்தோட்ட மக்களிடையே இக்காலத்தில் விநியோகிக்கப்படும் செயற்கை விஷத்தன்மை கொண்ட கள்ளு தொடர்பில் கண்டறிய தேசிய விஷத் தகவல் நிலையம் கவனம் செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தோட்ட வைத்திய அதிகாரியிடம் சகல விபரங்களையும் கோரியுள்ளதாக தெரிவிக்கும் பணிப்பாளர், விஷத் தகவல் மையத்தில் விஷத்தன்மை கொண்ட செயற்கை கள்ளை பரிசோதிக்கும் வசதி இல்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த செயற்கை நச்சு கள்ளு மாதிரிகள் அரசாங்கத்தின் சுவை பரிசோதகருக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், விஷத் தகவல் மையம் இது போன்ற விஷ உணவுகள் மற்றும் பானங்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.