காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களைக் கறுப்புத் துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.