டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி கொலை திட்டம் முறியடிப்பு.

அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் (Taylor Swift) வியன்னா (Vienna) இசைநிகழ்ச்சியில் சந்தேக நபர்கள் அதிகமானோரைக் கொலை செய்ய எண்ணியதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்தது.

அமைப்பு முன்கூட்டியே தகவலை வழங்கியதால் ஆஸ்திரியன் அதிகாரிகளால் பயங்கரவாதத் திட்டத்தை முறியடிக்க முடிந்தது.

நூற்றுக்கணக்கான உயிர்களையும் காப்பாற்ற முடிந்தது.

பயங்கரவாதத் தாக்குதலை நடத்தவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் ஐ.எஸ் குழு ஏற்படுத்திய தாக்கத்தால் அந்தத் திட்டத்தைத் தீட்டியதாக நம்பப்படுகிறது.

அந்தப் பயங்கரவாத தாக்குதலைப் பற்றிய தகவல் அமைப்பிற்கு எவ்வாறு முன்கூட்டியே தெரியும் என்பதைப் பற்றி கூறவில்லை.

டெய்லர் சுவிஃப்ட்டின் வியன்னா (Vienna) இசைநிகழ்ச்சியில் சுமார் 200,000 பேர் கலந்துகொள்ளவிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.