88-89 ஐ நினைவுபடுத்தி திசைகாட்டி கேன்வஸிங் சென்ற குழு மீது தாக்குதல்.

மாத்தளை, பலகடுவ பிரதேசத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் குழுவொன்றிடம் , 88/89 காலப்பகுதி நினைவிருக்கிறதா என வினவியதுடன், மீண்டும் இங்கு வரவேண்டாம் என ஒரு பெண் உட்பட நால்வர் அச்சுறுத்தி தாக்கியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மாத்தளை பலகடுவ வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் உட்பட நால்வர் வந்து அவர்களை அச்சுறுத்தி தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே தலைமையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.