சஜித்தை ஆதரிப்பது பற்றி எனக்கு தெரியாது : தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமிழரசு கட்சி தீர்மானித்ததையடுத்து கட்சியில் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது.

அதன் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா, தமது கட்சியின் பெரும்பாலான தலைவர்களுக்கு உரிய தீர்மானம் குறித்து தெரியாது என குறிப்பிடுகின்றார்.

வவுனியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கட்சியைச் சேர்ந்த சிலர் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும், அது தமது கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தல்ல எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீர்மானம் இரண்டு மூன்று பேரால் மட்டுமே எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் உட்பட பல தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை என மாவை சேனாதிராஜா கூறுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.