இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ  சாரஸ் என்ற அதிபோதைப் பொருளை  கியூ பிரிவு பொலிசார் பறிமுதல் இன்று (02.09)செய்துள்ளனர் .

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா, பீடி இலைகள், களைக்கொல்லி மருந்து, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்ற நிலையில்,

கடத்தலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கியூ பிரிவு பொலிசார்,மற்றும் கடலோரப்  பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (02.09)தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் ‘சாரஸ்’ என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு பொலிசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில், பொலிசார் அங்கு தீவிர கண்காணிப்புப்  பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது அங்கு இருந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 58 கிலோ  சாரஸ் என்ற அதிபோதை பொருள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு சுமார், 29 கோடி ரூபாய் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உற்பட 3 நபர்களிடம் கியூ பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டு   வருகின்றனர்.

 அண்மைக்காலமாகத் தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய இந்த கடத்தல்  மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.  

Leave A Reply

Your email address will not be published.