ரணில்-சஜித் இரு கட்சிகளின் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக அமைய உள்ளது.
ஒரே கருத்தைக் கொண்ட இரு கட்சியினரும் இணைந்து இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் மிகப்பெரும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி, அக்கட்சியின் இரண்டு தலைவர்களை இரு கட்சிகளாகப் போட்டியிட வைப்பதன் மூலம், மூன்றாம் தரப்புக்கு லாபம் கிடைக்கலாம் என இரு கட்சிகளின் தலைவர்களிடமும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.