13 முழுமையாக வழங்கப்படும் என அனுர திஸாநாயக்க சொன்னார் : சிங்கள தொலைக்காட்சியில் சுமந்திரன்

13வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என வடக்கில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுர திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிடுகிறார்.
ஆனால் தென்னிலங்கையில் அவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப் போவதில்லை எனவும், அதன்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனுர திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியான பதிலை வழங்க முடியாத நிலையில் அவர் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்ததாகவும், திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிரச சேனலில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.