பத்து வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த இளவாலை ஆசிரியர் பொலிசாரால் கைது!

சிறுமி தனக்கு நேர்ந்த குற்றத்தை கூறி போலீஸ் முன் கதறி அழுதுள்ளார்.

பத்து வயது மகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சிறுமியொருவரது ,தந்தையான பாடசாலை ஆசிரியரை யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸார் நேற்று முன்தினம் (04) கைது செய்துள்ளனர்.

இளவாலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் இளவாலை பெரியவிளான் பகுதியில் வசிக்கும் இந்த ஆசிரியர், தனது வீட்டில் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் தனது மகளை அடிக்கடி அடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால், பின்னர், உறவினர்கள் சிறுமியிடம் கேட்டபோது, ​​சிறுமி அனைத்து விவரங்களையும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி தனது தந்தையின் கோரிக்கைக்கு செவிசாய்க்காதபோது அவர் தாக்கியதும் தெரியவந்துள்ளது.

பொலிசார் அவரைக் கைது செய்ததையடுத்து, அனைத்து விவரங்களும் தெரியவந்துள்ளதுடன், சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக காங்கேசன்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ஆசிரியரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இளவாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.