மேடையில் அழுத தைவானியப் பாடகர் ஜேம் சியாவ்.

இசை நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட பாடலின்போது காதலரிடம் ‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?’ என்று கேட்கும் போக்குப் பிரபலமாகியுள்ளது.

திருமணத்தில் ஒன்றிணையவிருக்கும் ஜோடிகளைக் கண்டு சுற்றியுள்ளவர்களும் உற்றார் உறவினரும் ஆனந்தம் அடைவதுண்டு.

சீனாவில் அவ்வாறு நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் நின்ற பாடகரும் சேர்ந்து ஆனந்தமடைந்தார்….ஆனந்தக் கண்ணீருடன்!

இம்மாதம் 17ஆம் தேதி தைவானியப் பாடகர் ஜேம் சியாவ் (மேடையில் அழுத தைவானியப் பாடகர் ஜேம் சியாவ்) குவாங்சோ (Guangzhou) நகரில் நிகழ்ச்சி நடத்தினார்.

அவர் ‘Marry Me’ எனும் பாடலைப் பாடியபோது இரு ஜோடிகள் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர்.

அதைக் கண்ட சியாவ் அதிர்ச்சியில் சிறிது நேரம் வாயடைத்து நின்றார்.

அவர் பாடிக்கொண்டு இருக்கும்போதே தேம்பித் தேம்பிக் கண்ணீர் வடிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

பாடகர் அவ்வாறு உணர்ச்சியை வெளிப்படுத்துவது அது முதல் முறை அல்ல..

அவர் எளிதில் உணர்ச்சிவயம் அடையக்கூடியவர் என்று The South China Morning Post செய்தி நிறுவனம் சொன்னது.

Leave A Reply

Your email address will not be published.