ரணிலுக்கு ஆதரவாக யாழில் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர்கள் இன்று தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நாடு முழுவதும் இன்று காலை பிரச்சாரப் பணிகள் சம நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைவாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ். நகரில் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதேவேளை, நல்லூர் சங்கிலியன் தோப்பு மற்றும் உடுப்பட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.