ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் யானை தாக்கி பரிதாப உயிரிழப்பு.

வயல்வெளிக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புஞ்சிஹல்மில்லேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹடகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயான ஆர்.டபிள்யூ.எம்.ஜி.அபேரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் இ.எஸ்.அபேசேகர உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.