மார்ச் 12 இயக்கத்தின் இன்றைய விவாதத்தில் கலந்துகொள்ளாத ஜனாதிபதி வேட்பாளர்கள்.

மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்துக்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை.

‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துகொண்டார்.

குறித்த விவாவத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அனைவரும் ஆரம்பத்தில் விவாதத்தின் முதல் கட்டத்தில் பங்கேற்க உறுதியளித்தனர். ஆனால், இன்று நிகழ்ச்சி தொடங்கும்போது அவர்கள் வரவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.