ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது பணத்தை வீசி இறைக்கும் பாதாள தலைகள்!

நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் பாதாள உலக தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தாம் விரும்பும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதே இந்த பாதாள உலகக் கும்பல்களின் நோக்கமாகும்.

புலனாய்வு அமைப்புகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் கிட்டத்தட்ட 50 பாதாள உலக தலைவர்களுக்கு சர்வதேச சிவப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதே இதன் நோக்கமாகும்.

பாதாள உலகத்துடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகள் ஊடாக இந்த மக்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.