அமெரிக்க Kentucky நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் கென்டாக்கி (Kentucky) மாநிலத்தின் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 6 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபரான 32 வயது ஜோசப் கவுச்சை (Joseph Couch) காவல்துறை மும்முரமாகத் தேடி வருகிறது.

அவர் ஆபத்தான நபர் என்றும் அவரிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவரை நாட முயற்சி செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டது.

பாதிக்கப்பட்ட Interstate 75 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கென்டாக்கி மாநில ஆளுநர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.