யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உயர்தர மாணவி டிப்பர் மோதி சாவு!

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுதா விஜயகுமார் (வயது 17) என்ற உயர்தரப் பிரிவு மாணவியே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சைக்கிளில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் அந்த மாணவி மீது மோதி, டிப்பரின் பின் சில் ஒன்று மாணவியின் மீது ஏறியது.
இதன்போது படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அங்கு அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.