திருடர்கள் கூட்டம் ரணிலுடன். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் குற்றச்சாட்டு.

திருடர்கள் கூட்டம் ரணிலுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால், அவர்களைக் காப்பாற்றவே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர நினைக்கிறார்.திருடர்களும் தங்கள் திருட்டுக்களை மறைக்கவே ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதின் தெரிவித்துள்ளார்.

மன்னாரில்(10.09) செவ்வாய்கிழமை, நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சஜித் பிறேமதாஸ அவ்வாறு அல்ல அவர் இன, மத, மொழி பேதமற்று எல்லோரையும் சேர்த்து ஆட்சியமைக்கின்ற ஒரு ஜனாதிபதியாகவே வர நினைக்கின்றார்.”

“எனவே வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் அவரை வெல்ல வைப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எமது கட்சி மேற்கொண்டிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இன்னும் அதற்காக உழைக்கப் போகின்றோம்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தொடர்ச்சியாக பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டமாக மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று பகல் 12 மணியளவில் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.