இலங்கையை நலன்புரி நாடாக மாற்ற முடியாது… நான் ஆட்சிக்கு வந்தால் மறைந்த ஆர். பிரேமதாசாவின் கொள்கைகளை செயல்படுத்துவேன்… என்கிறார் சஜித்!

தான் ஆட்சிக்கு வந்தால் மறைந்த தனது தந்தை ஆர் பிரேமதாசவின் கொள்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவேன் SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையை நலன்புரி நாடாக மாற்றும் எண்ணம் இல்லை என்றும், ஏழைகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதே தனது வேலைத்திட்டம் என்றும் அவர் கூறுகிறார்.

மாவத்தகமவில் இன்று இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரேமதாச, வறியவர்களை வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் நோக்கில் தனது புதிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

“எங்கள் புதிய வறுமை ஒழிப்புத் திட்டம் முதலீடு, ஏற்றுமதி மற்றும் சேமிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் மாதம் 20,000 ரூபாய் வீதம் இரண்டாண்டுகளுக்கு வழங்குவோம். வணிகத் திட்டத்தைத் தொடங்க அவர்கள் இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஏழைகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார்.

“இலங்கை இனி ஒரு நலன்புரி நாடாக இருக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

“தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் இரகசிய உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்கவே இவ்வாறு செய்யப்படுகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் வெற்றிகரமான தலைவராகிவிடுவேன் என்று பயப்படுகிறார்கள். இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான எமது வேலைத்திட்டம் வெற்றியடையும் என அவர்கள் அஞ்சுகின்றனர் என்றும் கூறினார்.

சஜித் பிரேமதாச மீண்டும் விவசாயிகளுக்கு வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்யுமாறும், அடமானம் இன்றி கோடிக்கணக்கான கடன்களை பெற்ற பாரிய வர்த்தகர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட கடனை ரத்து செய்யுமாறும் கூறினார்.

“விவசாயிகளுக்குக் கொடுத்த கடனை எப்படி வெட்டுவது என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் அதை எப்படி செய்கிறேன் என்பதை அவர்களுக்கு காண்பிப்பேன், ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.