மனைவியின் அந்தியேட்டியின்போது கணவனும் உயிரிழப்பு – யாழ். கரணவாய் பகுதியில் சோகம்.

மனைவியின் அந்தியேட்டிக் கிரியையின்போது கணவனும் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி – கரணவாய் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரணவாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்திருந்தார். அவரின் அந்தியேட்டிக் கிரியைகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றன.

அதன்போது, உயிரிழந்த பெண்ணின் கணவனான முத்தன் தர்மலிங்கம் என்பவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.