‘நாங்கள் வந்ததும் இராணுவம் மற்றும் பொலிஸாரை தாக்குவோம்’ என சொல்லவில்லை – டில்வின் சில்வா மறுப்பு.

ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, ‘நாங்கள் வரும்போது’ என இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, தேசிய மக்கள் படையின் ஓய்வுபெற்ற இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் ‘நாங்கள் வந்ததும் இராணுவம் மற்றும் பொலிஸாரை தாக்குவோம்’ என்பது யாரோ குரல் கொடுத்த வீடியோ என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இரகசியப் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பில் தாம் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தற்போது பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அதன் பெறுபேறுகளின்படி எதிர்காலத்தில் தேவைக்கேற்ப செயல்படுத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜராக இருந்த அவர், அவ்வாறானதொரு கருத்தை தாம் வெளியிடவில்லை எனவும் அங்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒலிநாடா சந்தேக நபரின் குரல்தானா என்பதை உறுதிப்படுத்த இரசாயன பரிசோதனை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.