நல்லை ஆதீன குரு முதல்வரைச் சந்தித்த நாமல்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்த நிலையில் நல்லை ஆதீனத்துக்கும் விஜயம் செய்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளைச் சந்தித்த நாமல் ராஜபக்ஷ, அவரைப் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.

இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.