ஜனாதிபதி தேர்தல்! இருவருக்குள் கடுமையான போட்டி!

இந்த வார இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் யுத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னணியில் இருப்பதாகவும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் 07 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், நடத்தப்பட்ட இறுதிக்கட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் புலனாய்வு சேவைகள் தமது கணிப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வார இறுதியில் சஜித் பிரேமதாச 37% முதல் 40% வாக்குகள் பெற்று அவர் முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 26% முதல் 30% வாக்குகளைப் பெறுவார் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (15% முதல் 20%) மூன்றாவது இடத்திலும், நாமல் ராஜபக்ஷ (7% முதல் 10% ) முறையே நான்காவது இடத்திலும் உள்ளனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்பத்தில் 35% ஆக இருந்த மிதக்கும் வாக்குகள் தற்போது 10% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

8 மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு சஜித் பிரேமதாசவுக்கும் , அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி உருவாகியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.