தெஹிவளையில் ரயிலில் மோதி ஆண் ஒருவர் சாவு!

தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து (14) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.