லொறி – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்விட்டிகல மாவத்தை, கொஸ்வத்தை வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

நாரஹென்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் லொறிக்கடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.