அநுர, சஜித்தின் கதைகளை நம்பி மக்கள் எவரும் ஏமாறவே கூடாது! – இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

“அநுரகுமார திஸாநாயக்கவும், சஜித் பிரேமதாஸவும் மேடைகளில் ஆசைக் கதைகளைச் சொல்கின்றார்கள். அதனை நம்பி மக்கள் எவரும் ஏமாந்துவிடக்கூடாது.”

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் அடுத்த தலைமைத்துவத்தைத் தெரிவு செய்ய இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. சிலர் அதனை அரசியல் நெருக்கடியாக மாற்றி பிரச்சினை மேலும் உக்கிரமடைய வழி செய்தனர்.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துணிச்சலாக முன்வந்து நாட்டு மக்களைப் பாதுகாத்தார். நாட்டுக்காக ஜனாதிபதி செய்த அர்ப்பணிப்பைப் பலப்படுத்தவே அவரோடு இணைந்துகொண்டோம். அநுரவும் சஜித்தும் மேடைகளில் ஆசைக் கதைகளைச் சொல்கின்றார்கள். அதனை நம்பி மக்கள் எவரும் ஏமாந்துவிடக்கூடாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.