தேர்தல் பிரசார கூட்டங்களை முடிக்கும் திகதி குறித்த அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரக் கூட்டங்கள் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள எதிர்வரும் 21ஆம் திகதி 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அனைத்துப் பிரசாரங்களும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் இறுதிப் பேரணி நாளை (18) மருதானை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதுடன், சஜித் பிரேமதாச பங்கேற்கும் இறுதிப் பேரணி நாளை மருதானை டவர் திரையரங்கிற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.