சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் திரண்ட மக்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்த பிரசாரக் கூட்டம் யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் (17) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.