பாராளுமன்ற கலைப்பு தொடர்பான கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர், வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது விரைவான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதா என்பது குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என்றார்.

வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்காமல் முன்னோக்கி நகர்த்த முடியாது எனவும், அதற்கேற்ப நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.