சுவிஸில் 34 வயதான இலங்கையர் மரணம் : இருவர் கைது

சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநில Glattbrugg இல் உள்ள அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட 34 வயதான கோபி என அறியப்பட்ட , இலங்கை இளம் குடும்பஸ்தர் ஒருவர் , அவர் வசித்து வந்த அறையில் இருந்து போலீசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள அவருக்கு ,ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் , அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் குடும்பஸ்தரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக சூரிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 40 மற்றும் 54 வயதுடைய சுவிஸ் நாட்டை சேர்ந்த இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அவசர அழைப்பைத் தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை சம்பவ இடத்துக்கு அம்பியுலன்சுடன் விரைந்து சென்ற சூரிச் போலீசார் , தாம் போகும் போது அந்த நபர் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக கடந்த புதன்கிழமை அறிவித்தனர்.

கைதான இரண்டு சந்தேக நபர்களும் அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் என தெரிய வருகிறது. போலீசாரது விசாரணை தொடர்கிறது.

Leave A Reply

Your email address will not be published.