மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலைங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21.09) காலை இடம்பெறவுள்ள நிலையில்,

மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாகச் செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தின் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.