ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி விட்டார்!

ஜனாதிபதித் தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச கடந்த 14ம் திகதி நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அன்று காலை 08.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI 282 இல் நாட்டை விட்டு வெளியேறிய அவர் முதலில் இந்தியாவிற்கும் அங்கிருந்து பூட்டானு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகராக இருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று (20) நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச டுபாய் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.