ஒன்றோடொன்று தொடர்புடைய 3 துப்பாக்கிச் சூடுகள்

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு , கடந்த 15ஆம் திகதி படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கும், 18ஆம் திகதி கொஹுவல, சாரங்கரா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் தொடர்புள்ளது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.