வயோதிபப் பெண் ஜீப் மோதி மரணம்.

வயோதிபப் பெண் ஒருவர் ஜீப் வாகனம் மோதி மோதி உயிரிழந்தார்.

இந்த விபத்து அத்துருகிரிய – கொடகம வீதியில் நேற்று இடம்பெற்றது என்று அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த மேற்படி வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தின்போது ஜீப் வாகனத்தின் சாரதியும் வயோதிபப் பெண்ணும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்தார்.

பெண்ணின் சடலம் அத்துருகிரிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அத்துருகிரிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.