40 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று பிற்பகல் நிறைவடைந்தது.

இது தொடர்பான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருவதுடன், முதன்மையாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தினர் இம்முறை வாக்களித்துள்ளனர்.

இதில் 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பாவிக்காமல் விட்டுள்ளனர் .

வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான இலங்கையர்கள் இம்முறை வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.