சமூக வலைதளங்களில் தவறான முடிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை

தேர்தல் வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்படுவது ஊடகங்களின் பொறுப்பாகும் எனவும் சமூக ஊடகவியலாளர்களும் அதே பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய தலைவர் விசேட குழுவினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சில தரப்பினருக்கு பாரபட்சம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டிய தலைவர், அவ்வாறான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் பல துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.