வாக்குப்பதிவு முடிவுகளை பொது இடங்களில் கூடி நின்று கேட்பது அல்லது பார்ப்பது தடை

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது ஒன்று கூடி தேர்தல் முடிவுகளைக் கேட்பது அல்லது பார்ப்பது அல்லது பொது இடங்களில் பட்டாசு வெடிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க கூறுகிறார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், மதுபான விருந்துகளை நடாத்துவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் பெரிய திரைகளை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை ஏற்பாடு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை சட்ட மீறல்கள் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்கு கடைசி தருணம் வரை ஆதரவளிக்குமாறும் தலைவர் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, தேர்தல் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவது அனைவரினதும் பொறுப்பு எனவும், விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.