திசைகாட்டியிலிருந்து அவசர அறிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பான அறிவிப்பை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ளது.

முழு அறிவிப்பு பின்வருமாறு.

பத்திரிக்கை செய்தி – 2024 ஜனாதிபதி தேர்தல்

2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும், தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பொது அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்.

தேசிய மக்கள் சக்தி

Leave A Reply

Your email address will not be published.