இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார்.

இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டானது 5 வருடத்தில் தனது 3% வாக்கு வங்கியை 50% இற்கு மேலாக உயர்த்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 21 அமைப்புக்களின் அரசியல் கூட்டாக அனுர குமார திசனாயக்கவை முன்னிறுத்தி இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியது.

73 பேரைக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழுவில் 6 தமிழர்கள் உள்ளனர். இதில் இராமலிங்கம் சந்திரசேகரன், அருண் ஹேமச்சந்திரா , பேராதனை பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் விஜயகுமார், சறோஜா போல்ராஜ், கிட்ணன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் உள்ளனர்.

இவர்களில் அருண் மாத்திரமே வடக்கு-கிழக்கை சேர்ந்தவர். 54 வயதேயான அனுரகுமார திசநாயக்க களனி பல்கலைக்கழக பெளதிக விஞ்ஞான பட்டதாரியாவார்.

இன்று மாலை இலங்கையின் 9 வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் அனுர, சந்திரிகா குமாரதுங்கவுக்கு அடுத்ததாக இலங்கையில் குறைந்த வயதில் பதவியேற்கும் ஜனாதிபதியாகளில் ஒருவராக இருப்பார்.

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்பார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பில், முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல் ஆணையம் எண்ண வேண்டியிருந்தது.

அனுர திஸாநாயக்க –  5,740,179
சஜித் பிரேமதாச – 4,530,902

Leave A Reply

Your email address will not be published.