அன்புக்குரிய குழந்தையை நான் உங்களிடம் மிகவும் அன்புடன் ஒப்படைக்கிறேன்” – ரணில் (videos)

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அவர்களே, இலங்கையின் அன்புக்குரிய குழந்தையை நான் உங்களிடம் மிகவும் அன்புடன் ஒப்படைக்கிறேன்” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தனது விசேட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அன்பிற்குரிய குழந்தையை இதுவரை பத்திரமாக வலை பாலத்தின் ஊடாக கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அந்த குழந்தையை இன்னும் பாதுகாப்பாக வலை பாலத்தின் ஊடாக கொண்டு செல்ல முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழு உரையும் ……

“வணக்கம்
அன்புள்ள குடிமக்களே,
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தீர்மானம் ஒன்றை வழங்கியுள்ளனர். அந்த முடிவை நாம் மதிக்க வேண்டும். அந்த முடிவின்படி இலங்கை அரசின் உண்மையான இருப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன், மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், திவாலாகி, பொருளாதாரப் படுகுழியில் தள்ளப்பட்ட இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். அன்றைய சவாலை எதிர்கொள்ளும் அளவு பலருக்கு தன்னம்பிக்கை இல்லாத நேரத்தில் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு அளித்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றினேன். இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

எனது அரசியல் வாழ்க்கையில் எனது நாட்டிற்காக என்னால் ஆற்ற முடிந்த மிக மதிப்புமிக்க பங்கு இது என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைக் பொறுப்பேற்றபோது, ​​பணவீக்கத்தை 70 சதவீதத்திலிருந்து 0.5% ஆக குறைக்க முடிந்தது. இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை , 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த முடிந்தது.

மேலும், டாலருக்கு எதிராக 380 இருந்த ரூபாயின் மதிப்பை 300 ரூபாயாகக் குறைத்து வலுவான மற்றும் நிலையான மதிப்புக்குக் கொண்டு வர முடிந்தது.

மேலும், -7.3% எதிர்மறையாக இருந்த பொருளாதார வளர்ச்சியை 2.3% அதிகரிக்க நான் உழைத்தேன். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் எனது வரலாற்று அரசியல் பாத்திரத்தை சரியான மதிப்பீட்டை எதிர்காலத்தில் வழங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

இந்நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனது இடம் இன்றல்ல, எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையை பின்பற்றி மக்களின் துயரங்களை பெரிய அளவில் அணைத்தேன். புதிய ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின்படி சரியான பாதையை தெரிவுசெய்து துன்பங்களுக்கு முடிவுகட்டுவார் என நம்புகிறேன்.

மிகவும் சவாலான கயிற்று பாலத்தில் அன்புக் குழந்தையான இலங்கையை முடிந்தவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

கயிற்று பாலத்தின் இறுதிக்கட்டத்தை அண்மித்து ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் அந்த அன்பான குழந்தையைக் கையளிக்க , நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் இருவரும் நேசிக்கும் இலங்கையின் அன்பான குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை விட இந்த குழந்தையை கயிற்று பாலத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

எனக்கு அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பதவிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த நாட்டு மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை தயக்கமின்றி உரிய நேரத்தில் நிறைவேற்றுவேன்.

எனது ஆட்சிக் காலத்தில் ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைவருக்கும், இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நன்றி!”

Leave A Reply

Your email address will not be published.