இன்று காலை 9 மணிக்கு அனுரவின் பதவிப் பிரமாணம் – சுப நேரங்கள் இல்லை – பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் திஸாநாயக்க தனது பதவியில் பணியாற்ற ஆரம்பிக்கவுள்ளார்.

இனிமேல் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமாட்டார், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படுவார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்தார். மேலும் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது நன்றி உரையிலும் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.