வட மாநிலத்தவர் வெளியேறிவிட்டால் பெங்களூரு நகரம் காலியாகிவிடும் – இன்ஸ்டா பிரபலத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

வட மாநிலத்தவர் வெளியேறிவிட்டால் பெங்களூரு நகரம் காலியாகிவிடும் என்ற இன்ஸ்டா பிரபலத்தின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலமான சுகந்த் சர்மா என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், வடமாநிலத்தவர் வெளியேற வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறினால் தங்கும் விடுதிகள் காலியாகிவிடும் எனவும், கோரமங்களாவில் உள்ள கிளப்புகள் காற்றாடும் எனவும் கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சுகந்த் சர்மா பெங்களூருவைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் பலர் விமர்சித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.