லெபனானில் இஸ்ரேல் ஆகாயத் தாக்குதல் – 492 பேர் மரணம்.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் 492 பேர் மாண்டனர்.

அவர்களில் 35 பேர் குழந்தைகள்.

1,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சென்ற ஆண்டிலிருந்து இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவினருக்கும் இடையே பூசல் தொடர்கிறது.

இதுவரை நடத்தப்பட்டதில் நேற்றைய (23 செப்டம்பர்) தாக்குதலே ஆக மோசமானது.

ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா புழங்கும் இடங்களை விட்டு வெளியேறும்படி தென் லெபனான் மக்களுக்கு கைத்தொலைபேசியில் எச்சரிக்கைக் குறிப்பு அனுப்பியது இஸ்ரேலிய ராணுவம்.

லெபனான் பிரதமர், இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று குற்றஞ்சாட்டினார்.

இஸ்ரேலின் வட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாய் வீடு திரும்பும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.