நாடாளுமன்றத் தேர்தலில் விக்கி போட்டியிடமாட்டார் – கட்சிக் கூட்டத்தில் அவரே தெரிவிப்பு.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்று அறியமுடிகின்றது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரன், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.