முன்னாள் அமைச்சர் பிரசன்ணவின் ஊடகப் பிரிவுக்கு சீல் வைக்கப்பட்டது

நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவிற்கு சீல் வைக்க மேலதிக செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.

புதிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் விஜித ஹேரத் பதவியேற்பதற்கு முன்னர் அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, யாரும் உள்ளே நுழையாதவாறு ஊடகப் பிரிவிற்கு சீல் வைக்கப்பட்டது.

அங்கு பணிபுரிந்த நிரந்தர பணியாளர்கள் அனைவரும் முன்பு பணிபுரிந்த துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீல் வைப்பதற்கு முன் அங்குள்ள அனைத்து பொருட்களையும் தணிக்கை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரு.பிரசன்ன ரணதுங்க கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.