வடக்கின் புதிய ஆளுநர் வேதநாயகனுக்கு இந்தியத் துணைத் தூதர் நேரில் வாழ்த்து!

வடக்கு மாகாணத்தில் புதிதாகக் கடமைகளைப் பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்த யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.