7 வயதுச் சிறுவனை நரபலி கொடுத்த சந்தேகத்தில் ஐவர் கைது.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் 7 வயதுச் சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கப் பள்ளி ஒன்றின் நலனுக்காக அவர்கள் சிறுவனை நரபலி கொடுக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை அந்த விவரங்களை அளித்தது.

ஆக்ரா நகருக்கு அருகிலிருக்கும் ஹத்ராஸ் (Hathras) எனும் இடத்தில் சம்பவம் நடந்தது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவன் படுக்கையில் மாண்டு கிடக்கக் காணப்பட்டான்.

பள்ளி முதல்வர் காவல்துறையை அழைப்பதற்குப் பதிலாகச் சிறுவனின் உடலைக் காரின் பின்புறத்தில் வைத்துப் பூட்டினார்.

பள்ளி முதல்வரின் தந்தை சிறுவனுக்குச் சூனியம் வைக்க முயன்றதாகவும் அதற்கு முன்னரே சிறுவன் இறந்ததாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

பள்ளி முதல்வரும் அவரது தந்தையும் மேலும் மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடர்கிறது.

இந்திய தேசியக் குற்றப் பிரிவுப் பதிவுகளின்படி- 2014க்கும் 2021க்கும் இடையே 103 நரபலிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.