தூதரக சேவைகளில் உள்ள அரசியல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நியமனங்கள் அனைத்தும் இரத்து : உடனடியாக மீள அழைக்கப்படுவர்.

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தூதரக சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் நியமனங்களையும் உடனடியாக இரத்து செய்து இலங்கைக்கு திரும்ப அழைக்க ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தீர்மானித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள், நண்பர்கள் அரசியல் நியமனம் பெற்று அந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அவர்களுக்கு இராஜதந்திர அறிவோ அனுபவமோ இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நியமனங்களால் வெளிநாட்டு தூதரகங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் சில தினங்களில் இந்த அரசியல் சார்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களும் இரத்துச் செய்யப்படுவதுடன், இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக சேவைகளுக்கான அனைத்து அரசியல் நியமனங்களையும் உடனடியாக இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தீர்மானித்துள்ளார் எனவும் ,அவர்களை இலங்கை அரசாங்கம் திரும்ப முடிவு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.